செப்டம்பர் 19, 2012

விநாயகர் - ம. ரமேஷ் ஹைக்கூ


அருள் தந்த பிள்ளையார்
முடமாகிப் போனர்
சிலைகள் கரைப்பு

மூன்று நாள் அருள்
ஊர்வலமாய் விநாயகர்
யார் சாபம் கரைதல்

கை கால் உடைத்தும்
ஏதும் செய்யாதிருந்தார்
பின்லேடன் விநாயகர்

தும்பிக்கை இழந்தும்
மதம் பிடிக்க வில்லை
விநாயகர் சிலைக்கு!

கரை ஒதுங்கிக் கிடக்கிறது
கவனிப்பார் யாருமில்லை
விநாயகர் சிலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக