செப்டம்பர் 10, 2012

புதிதாய்க் கொஞ்சம் ரணம் (கஸல்)




பூ உதிரும்போதும்
தொலைவில்
பாடல் ஒலிக்கும்போதும்
புதிதாய்க் கொஞ்சம் ரணம்
உண்டாகிறது

அழுதுத் துடித்துத்
தவித்துப் பார்த்தும்
நீயேதான் வேண்டுமென்று
திரும்பக் திரும்பத்
உன்னிடம் கெஞ்சத் தோன்றுகிறது

நாம் என்ன தவறு செய்தோம்?
சரி…
எந்தச் சாமி
நம்
காதலின் கண்ணைக் குத்தியிருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக