ஜூலை 25, 2013

கடவுளும் அரசியல்வாதியும் (ஹைபுன்- 21)

கடவுளும் அரசியல்வாதியும்
சொர்க்கத்தில் சந்தித்துக்கொண்டார்கள்.
மேடை முழக்கம்போல்
கடவுளைப் புகழ்ந்தும்
சாத்தானை இகழ்ந்தும்
பேசியதைக் கண்டு
கடவுளே சொக்கித்தான் போனார்.
பேச்சுக்கிடையில்
ஆளும் கட்சிதான் கடவுள் என்றான்.
கோபம் வந்துவிட்டது கடவுளுக்கு.
நாங்கள் நினைத்தால் ஆக்குவோம்.
எதிர்கட்சிகள் ஆக்கியதை அழிப்போம்.
மாற்றி அமைப்போம்.
ஏன்
நீதி மன்றமும்
கொள்கை முடிவுக்குக் கட்டுப்பட்டுப்போகும் என்றான்.
கொஞ்சம் திமிராகவே!
ஆக்கல் அழித்தல் காத்தல் செய்யும்
நானே உயர்ந்தவன் என்றான் கடவுள்.
அரசியல்வாதி
இதைச் சொன்னதும் வாயடைத்துப்போனார்:
நாங்கள் நினைத்தால்
கடவுளே இல்லை என்று
சட்டம் கொண்டுவந்து
சட்ட சபையிலும் நாடாளுமன்றத்திலும்
தீர்மானம் நிறைவேற்றி
அரசியல் செய்வோம். வெற்றியும் பெறுவோம்.

கடவுள்
நீதிமன்றம்

உயர்ந்தது அரசியல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக