ஜூலை 16, 2013

ஆசை யாரை விட்டது (கஸல்)

ஆசை 
யாரை விட்டது
அது
நம்மை மட்டும்
விட்டுவைக்க

காதலியே!
காதலில் தோற்றாலும்
வேறு ஒரு வாழ்க்கையை
அமைத்துக்கொள்வோம்
தனிமையில் வாழ
படைக்கப்பட்டவர்கள் அல்ல நாம்

அது, பூ
உதிர்ந்தால்
புன்னகைக்காக ஏங்குவதில்லை
நாம் காதலர்கள்
தோற்றாலும்
இழந்த அன்புக்காக

ஏங்காமல் இருந்துவிட முடியாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக