ஜூலை 18, 2013

வாலிக்கு ஓர் ஒப்பாரி!!!

ஒப்புக்குச் சொல்லி அழ
உன் பாடல்தான் துணைக்கு வருகிறது
பாடல்களுக்கு இறுதி ஒப்பனையா?
ஒப்பனை கலைத்தால் நிஜ முகம்தானே  
உனக்கு மட்டும் ஏன் மரணம்?

தாலாட்டுப் பாடும்போதே
பாடல் கற்றவன் நீ
அன்று மடியில் படுத்தாய் சிரித்தார்கள்
மண்ணில் படுக்கிறாய் அழுகிறார்கள்

இரங்கல் சொல்லும் போதே
உன் பாடல்கள் நெஞ்சில் அழுகிறது
காதலர்களுக்கு சுகமும் துக்கமும் தந்தவன் நீ
மரணத்த தருவாயில் நீ காதலர்களுக்கு
எழுத நினைத்தப் பாடலை இனி யார் எழுதுவார்?

கற்ற வலியை பாடலில் பழியாக்கியவன் கண்ணதாசன்
பெற்ற இன்பத்தை மொழியாக்கியவன் நீ
அவன் நிரந்தரமானவன் என்றான்
அது அவனுக்கு மட்டுமல்ல உனக்கும்தான்.

நீயும் நிரந்தரமானவன்தான் அழிந்தவனில்லை
உலகம் அழியும் போது
உன் பாடல்கள் அழியும்

அன்றுதான் நீ இறந்தவனாவாய்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக