ஜூலை 02, 2013

மலர்களின் நிறம் - ம. ரமேஷ் ஹைக்கூ

பார்த்ததும்
வருத்தம் கொண்டாள்
மலர்களின் நிறம்

பலமாய் வீசும் காற்று
தள்ளாடும் உருவம்
காவல்பொம்மை

அழுதுகொண்டே
திரும்பிப் பார்க்கின்றது
இறைவனின் பாதம் சேர்ந்த பூ

உதிர்ந்திருக்கும் சருகுகள்
அழகாகத் தெரிகிறது
தெருக்கள்

மெல்லிய தீண்டல்
மெய் சிலிர்க்கிறது

காற்று பட்டு மலரும் பூ


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக