ஜனவரி 25, 2015

பெண்பூ

வீட்டுத் தோட்டத்தில்
பூக்கள் மலர்ந்திருப்பினும்
பறித்து சூடியதில்லை…
நீ, வாங்கி வரும்
மலர்கள் சூட வேண்டி…

அந்த
கூந்தல்சூட
வாங்கிக் கொடுத்த பூச்சரங்கள் எல்லாம்
மக்கி, குப்பையாகி
உரமாகியிருக்கும் என் தெருக்கோடிக்கு
என்றாலும்
இன்றும் மணக்கிறது
அந்த நினைவுகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக