செப்டம்பர் 23, 2016

கொள்ளிவாய்ப் பிசாசு

கொள்ளிவாய்ப் பிசாசு
தலைவிரித்தாடி செல்கிறது
தொலைவில் கண்மூடி நிற்கிறேன்

கொள்ளிவாய்ப் பிசாசு - விளக்கம் 

கிராமப்புறங்களில் பூமியிலிருந்து திடீர் திடீர் என நெருப்புச் சுடர் தோன்றி விட்டு விட்டு எரிந்துகொண்டே நகருவதைப் பார்த்திருக்கலாம். இதனைப் பார்க்கும் மக்கள் அறியாமையின் காரணமாக கொள்ளிவாய்ப் பிசாசு போகிறது என்று கூறுவர். நானும் சிறு வயதில் பார்த்திருகக்கிறேன். அப்போது பயந்து கண்மூடிய நினைவும் இப்போதும் இருக்கிறது. சரி... உண்மையிலேயே கொள்ளிவாய்ப் பிசாசு என்ற ஒன்று இருக்கிறதா என்றால், இல்லை என்றே அடித்துக் கூறலாம். பின் எப்படி இந்த நெருப்புச் சுடர் தோன்றுகிறது?
பூமியின் மீது கொட்டப்படும் அல்லது கொட்டும் இலைகள் மற்றும் மக்கும் பொருள்கள் ஆகியவை பாக்டீரியாக்களின் வினையினால் அழுகிய நிலையை அடைகின்றன. அழுகிய நிலையை அடைந்தபோது மீத்தேன் வாயு உண்டாகிறது. பூமிக்குள் (சதுப்பு நிலப் பகுதிகளில்) உண்டாகிய இந்த மீத்தேன் வாயு பூமியின் மேல் உள்ள சிறுசிறு துளைகளின் வழியாக வெளியேறுகின்றது.
மீத்தேன் வாயு சாதாரண வெப்ப நிலையில் தன்னிச்சையாகத் தீப்பிடித்து எரியும் தன்மையுடையது. எனவே, பூமியிலிருந்து வெளியேறிய மீத்தேன் வாயுவானது வாயு மண்டலத்தினுள் வந்தவுடன் தானாகத் தீப்பிடித்து எரிய ஆரம்பிக்கின்றது.
இந்த உண்மையை அறியாத மக்கள் கொள்ளிவாய்ப் பிசாசு உலவுவதாகக் கூறுகின்றனர். (விளக்கத்துக்கான நன்றி - http://www.periyarpinju.com/2011/may/page08.php

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக