செப்டம்பர் 25, 2016

அரளிச் செடி


வீட்டை பூட்டி-திரும்பியதும்
முகம் பதித்து காத்திருக்கும்
மஞ்சள் நிறப் பூனை


உருவங்கள் தெளிவில்லை
அரளிச் செடியில்...
மஞ்சள் மஞ்சளாய் பூக்கள்


எங்கெங்கென்று தேடும்போது
கூவத் தொடங்குகின்றன…
கண்மறைவில் சுவர்க்கோழிகள்

1 கருத்து: