ஜூலை 17, 2012

ம. ரமேஷ் - ஹைபுன் -5


தோட்டம்
என் கவலைகளைத் தீர்க்கும் மருந்து.
மாலையில் தோட்டத்தில் அமர்ந்து ரசிப்பதும்
ருசிப்பதும் வழக்கம்.
மரம் செடி கொடிகளில்
கனியும் பழமும் இருந்தாலும்
பறவைக்கு
பூச்சிகளின் மீது ஏதோ ஒரு கண்.
நாம் அசைவம் சாப்பிடுகிறோமே
அதுபோல அதற்கும் ஆசையோ என்னவோ?
கனி பழங்களை விட்டுவிட்டு
பூச்சிக்காகக் கீழ்நோக்கி வருகிறது பறவை

தன் நிழலிலிருக்கும் பூச்சிகளை
மரம், சருகு கொண்டு மறைக்கிறது
பறவைகள் கொத்தும் முன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக