குறட்கூ கவிதைகள்
புதுக்கவிதையின் பரிணாமத்தில் புதுவகை இக் குறட்கூ. குறள்போல் கூவுவதால் குறட்கூ. திருவள்ளுவரின் குறள் இரண்டு அடிகளில் ஏழு சீர்களில் கருத்துக்களை எடுத்துரைக்கிறது. குறட்கூ இரண்டு அடிகளில் மொத்தம் நான்கே சீர்களில்
(முதலடியில் இரண்டு சீர்கள் இரண்டாம் அடியில் இரண்டு சீர்கள்) கருத்துக்களை எடுத்துரைக்கிறது. இக் குறட்கூவும் என் பரிசோதனை முயற்சிகளில் ஒன்று என்பதிலும் கவிஞர் தனிகைச்செல்வனின் தமிழின் முதல் குறட்கூ வகைக் கவிதைகளைத் தொடர்ந்து என்னுடைய இக் குறட்கூ வகைக் கவிதைகளை உங்களுக்கு அறிமுகப் படுத்துவதிலும் மகிழ்கிறேன்.
· காதலுக்குக் கண்ணில்லை
கண்ணீர் உண்டு
· எல்லா ஊரும்
நம் ஊரில்லை
· கடமையைச் செய்
பலனை எதிர்பார்
· தாலியில்லாமல் தொட்டபோது
காதலும் செத்துப்போனது
· உருக்கொடுத்து சிலையாக்கியதும்
கல்லாகிப்போனான் இறைவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக