ஜூலை 17, 2012

மன்னிப்பு ஏன் கேட்கிறாய்? (கஸல்)


மன்னிப்பு ஏன் கேட்கிறாய்?
எனக்கு
உன் காலடிபட்டு
கலைந்துபோன
வாயிற்கோலம்தான் அழகு!

எந்தத் தெய்வமும்
செவிசாய்க்கவில்லை
கடைசியில்
காதலியின்
காலடியிலேயே வீழ்ந்துவிட்டேன்

ஏன் தயக்கம்?
நீ எந்நிலையில் இருந்தாலும்
வா
நான் உன்னை
காதலித்துக் கொண்டேதானிருக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக