ஜூலை 12, 2012

காதல் தோல்விக்குப் பிறகு... கஸல்


நம் காதல்
ஒன்றிரண்டு
ஆசைகளோடு
முற்றுப்பெற்றுவிட்டது

ஆசை ஆசையாய்
ஆயிரம் ஆசைகள்
காதல் தோல்விக்குப் பிறகு

எதற்கும்
வருந்தாதவர்களையும்
வருந்தச் செய்துவிடுகிறது
காதல்

நான்
உன்னைக் கடைசியாகச்
சந்தித்தபோது
என்னோடு வந்துவிடுஎன்று
சொல்லியிருந்தால்
என்னோடு
வந்துவிட்டிருப்பாயோ என்னவோ!



எந்நிலையிலும்
அழாதவர்களைக்கூட
அழவைத்து
வேடிக்கைப் பார்த்துவிடுகிறது
காதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக