மலையின்
உச்சியில் நான் மட்டும் தனித்திருக்கிறேன். தண்ணீர் தாகம். கையில் மினரல் வாட்டர்
இல்லை. என்ன கடவுளே இது எனும் போது என் கிராமத்து விளையாட்டுத்திடலில் கபடி ஆடும்
இடத்தில் ஒரே சப்தம். ஐயோ அவனுக்கு அடிப்பட்டுவிட்டதே... தண்ணி எடுத்துனு வாங்க...
தண்ணீ எடுத்துனு வாங்க... பல கிலோ மீட்டர்களுக்கு அப்பால் மலை உச்சியில் இருக்கும்
எனக்கு அவர்களின் சப்தமும் அழுகையும் கேட்கிறது. அவர்களின் உருவம் தெளிவாய்
தெரிகிறது... இந்நாள் வரை கபடி ஆடாத ஒருவனுக்கு அடிபட்டிருக்கிறது. அவன் தண்ணீ
குடிக்கும் நேரம் மழை பெய்து பாறையில் தண்ணீர் தேங்க நான் அதை அள்ளிக்
குடிக்கிறேன்.
தண்ணீருக்காக ஏங்குகிறது
பாவம் உலகம்
மரம் செடி கொடி
பாவம் உலகம்
மரம் செடி கொடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக