அக்டோபர் 30, 2012

கல்லறையும் உடையத் தயாராகிறது (கஸல்)


இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடையத் தயாராகிறது

பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்

இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!

© கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக